காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலை - சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி அளித்தார் ராகுல் காந்தி
Mar 21 2023 8:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளில் பத்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என ராகுல்காந்தி உறுதியளித்துள்ளார்.
வரும் மே மாதம் கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவும் காங்கிரசும் ஜனவரி மாதத்திலேயே பிரச்சாரத்தை தொடங்கி விட்டன. அதன் ஒரு பகுதியாக பெலகாவியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, மாநிலத்தில் காலியாக உள்ள இரண்டரை லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார். ஒவ்வொரு பட்டதாரிக்கும் மாதம் 3 ஆயிரம் மற்றும் ஒவ்வொரு டிப்ளமோதாரருக்கும் மாதம் ஆயிரத்து 500 ரூபாய் வேலையின்மை உதவித் தொகையாக வழங்கப்படும் என்றும் ராகுல் தெரிவித்தார்.