மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணிஷ் சிசோடியாவின் ஜாமின் மனு இன்று விசாரணை... டெல்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளார்
Mar 21 2023 11:01AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணிஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. பிப்ரவரி 26ஆம் தேதி கைதான சிசோடியாவை சிபிஐ 2 முறை காவலில் எடுத்து விசாரித்தது. அவருடைய நீதிமன்ற காவலும் வருகிற 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி நீதிமன்றத்தில் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.