புதிய கல்விக் கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்த நடவடிக்கை - தேசிய கல்விக் கொள்கை அனைவராலும் ஏற்பு என அமித்ஷா பேச்சு
Mar 21 2023 11:06AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதிய கல்விக்கொள்கையை அனைவரும் ஏற்றுக்கொண்டு விட்டதாகவும் நாடு முழுமைக்கும் அதனை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத் மத்திய பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற 4-வது பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், பொதுவாக கல்விக் கொள்கைகள் அமல்படுத்தப்படும் போது சர்ச்சைகள் ஏற்படுவது வழக்கம் என்றும் ஆனால் 2022-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த கல்விக் கொள்கைக்கு எதிராக யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவோ அல்லது குற்றச்சாட்டுகளை முன்வைக்கவோ இல்லை எனத் தெரிவித்தார். புதிய கல்விக் கொள்கை தேசத்தின் பெருமித உணர்வு நிரம்பிய குடிமகனை உருவாக்கும் என்றும் அமித் ஷா குறிப்பிட்டார்.