தன் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும், அதற்கு அஞ்சப்போவதில்லை - காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி
Mar 21 2023 2:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தன் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும், அதற்கு அஞ்சப்போவதில்லை என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் உரையாற்றிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன், இந்தியாவின் தரத்தை குறைக்கும் வகையில் ராகுல் காந்தி பேசியதாக குற்றம்சாட்டினர். இந்நிலையில், வயநாடு தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பாஜகவினர் குழப்பத்தில் இருப்பதாகவும், அவர்கள் தான் இந்தியா என நினைத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். பிரதமர் மோடி ஒரு இந்திய குடிமகனே தவிர, இந்தியாவே அவர்தான் என கூற முடியாது என்றும் ராகுல்காந்தி தெரிவித்தார். இதனால், பிரதமர் குறித்தும், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் பற்றியும் விமர்சிப்பது, இந்தியாவை விமர்சிப்பது போல ஆகாது என ராகுல் காந்தி தெரிவித்தார்.