உலக காசநோய் உச்சி மாநாட்டில் பங்கேற்ற இன்று வாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி - ரூ.1,780 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டுகிறார்
Mar 24 2023 10:38AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்திரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு இன்று பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி ஆயிரத்து 780 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார். உலக காசநோய் தினத்தையொட்டி காசநோயை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக முயற்சிகளை மேற்கொண்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு பிரதமர் மோடி விருதுகளை வழங்குகிறார். பின்னர் சம்பூர்ணானந்த சமஸ்கிருத பல்கலைக்கழக மைதானத்தில் ஆயிரத்து 780 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.