புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு : ஏப்ரல் 5ம் தேதி வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படும் என தலைமை நீதிபதி சந்திரச்சூட் உத்தரவு
Mar 24 2023 2:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்டவற்றை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா உள்ளிட்ட 14 கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. எதிர்க்கட்சித் தலைவர்களை முடக்க இந்த அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. எனவே, புலனாய்வு அமைப்புகளின் கைது நடவடிக்கைகளுக்கு உரிய வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். இதையடுத்து வரும் ஏப்ரல் 5ம் தேதி விசாரணைக்குஎடுத்துக்கொள்ளப்படும் என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.