எம்.பி. பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் : தொடர்ந்து சண்டை செய்வோம் என காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
Mar 24 2023 6:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அவதூறு வழக்கில் எம்.பி. பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து சண்டை செய்வோம் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இந்த நாட்டிற்காகவும், மக்களுக்காவும் வீதி முதல் நாடாளுமன்றம் வரை ராகுல்காந்தி தொடர்ந்து சண்டையிட்டதாக பதிவிடப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை காப்பாற்ற முடிந்த அனைத்தையும் அவர் செய்து வருவதாகவும், ஒவ்வொரு சதி வேலைகளுக்கு மத்தியிலும் ராகுல்காந்தி தொடர்ந்து போராடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சண்டை தொடரும் என்றும் காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.