சர்வாதிகார பாஜக ஆட்சியை மக்கள் நீண்ட நாள் சகிக்கமாட்டார்கள் : ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கருத்து
Mar 24 2023 6:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சர்வாதிகார பாஜக அரசை மக்கள் நீண்ட நாள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் என ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். இதேபோல், இந்திராகாந்தியை தொந்தரவு செய்தனர், பின்னர் தகுதி நீக்கமும் செய்தனர் என குறிப்பிட்டுள்ள அவர், பின்னர் அதிகப்படியான பெரும்பான்மையுடன் இந்திராகாந்தி வென்றதையும் சுட்டிக்காட்டியுள்ளார். சமீபத்திய நடப்புகள் அனைத்தும் காங்கிரஸ்க்கு சாதகமாக உள்ளது என்றும் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.