கேரள பல்கலையில் 15 செனட் உறுப்பினர்கள் நியமன வழக்கு : ஆளுநரின் உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
Mar 24 2023 6:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள் நியமனத்துக்கு எதிரான ஆளுநர் உத்தரவை அம்மாநில உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலைக்கழகத்தில் 15 செனட் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் நியமனத்தை அம் மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் கடந்த ஆண்டு அக்டோபரில் தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து செனட் உறுப்பினர்கள் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் செனட் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக ஆளுநர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ளது.