ராகுல்காந்தி பதவி நீக்கம் செய்தது காந்திய தத்துவத்திற்கு செய்த துரோகம் : இந்திய-அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ரோ.கன்னா கண்டனம்
Mar 25 2023 2:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராகுல்காந்தியின் பதவியை மத்திய அரசு பறித்தது காந்திய தத்துவத்திற்கு செய்த துரோகம் என இந்திய-அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ரோ.கன்னா தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்ட அவர், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை காரணம் காட்டி எம்.பி. பதவியை அதிரடியாக மத்திய அரசு பறித்துள்ளது. அவதூறு வழக்கில் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்த 24 மணி நேரத்திற்கு பிறகு தகுதி நீக்கம் செய்யப்பட்டது, பழிவாங்கும் நடவடிக்கையை காட்டுவதாக தெரிவித்தார். நான்கு முறை எம்.பி.யாக இருந்த ராகுல்காந்தியின் பதவியை மத்தியில் ஆளும் பாஜக அரசு பறித்து, இந்தியாவிற்கு துரோகம் இழைத்துள்ளதாக ரோ.கன்னா விமர்சித்துள்ளார்.