சுங்கசாவடிகளுக்கு மாறாக ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல் முறை : 6 மாதங்களில் அறிமுகப்படுத்தவுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தகவல்
Mar 25 2023 2:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டில் சுங்கசாவடிகளுக்கு மாறாக ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல் முறைகள் அடுத்த 6 மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லியில் தொழில்கூட்டமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், அரசுக்கு சொந்தமான தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் தற்போது சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் வருவதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் இது ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடியாக உயரும் என தெரிவித்தார். போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், நெடுஞ்சாலைகளில் பயணிக்க சரியான தூரத்திற்கு வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கவும் அடுத்த 6 மாதங்களில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்தார்.