கொச்சி அருகே கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து - ஓடுபாதைக்கு வெளியே விழுந்து நொறுங்கியதில் ஒருவருக்கு காயம்
Mar 26 2023 5:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய கடலோர காவல் படையின் துருவ் ரக ஹெலிகாப்டர் கொச்சின் விமான நிலையம் அருகே விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயமடைந்தனர். பயிற்சிக்காக புறப்பட்ட ஹெலிகாப்டர் எதிர்ப்பாராத விதமாக விபத்தியில் சிக்கியது. விபத்தில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 8-ம் தேதி மும்பை கடற்பகுதியில் துருவ் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதிப் பயணித்த 3 விமானிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.