ராமர் பாலத்தைச் சுற்றிப் பார்க்க ஏதுவாக சுவர் அமைக்க வேண்டும் - லக்னோவைச் சேர்ந்த வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
Mar 26 2023 5:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமர் பாலத்தில், பொதுமக்கள் தரிசனம் செய்ய ஏதுவாக, அதனைச்சுற்றி கடலில் சுவர் எழுப்ப வேண்டுமென, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லக்னோவை சேர்ந்த வழக்கறிஞர் அசோக்பாண்டே, ராமர் பாலத்தை சுற்றி பார்க்க ஏதுவாக, அதனைச் சுற்றி சுவர் எழுப்ப வேண்டுமென்றும், தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். பாலத்தை தரிசனத்திற்கு அனுமதிக்காததன் மூலம் அரசு, அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.