இங்கிலாந்தில் வணிக வளாகத்தில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குல்
Mar 26 2023 5:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இங்கிலாந்தில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 4 பேரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹல் நகரிலுள்ள வணிக வளாகத்தில் இரவு 11 மணிக்கு கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார், ரத்த காயங்களுடன் பிணமாகக் கிடந்த ஒருவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் தற்போது நான்கு பேரைக் கைது செய்திருப்பதாக அறிவித்துள்ளனர். கத்திக்குத்து சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு அரண் அமைத்துள்ள போலீசார், அப்பகுதிக்கு பொதுமக்கள் செல்லத் தடை விதித்தனர்.