குஜராத்தில் ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக வெளிநாட்டு வர்த்தக டிஜி கைதான நிலையில் தற்கொலை : டிஜியின் மனைவி தூக்கி விசிய பணமூட்டையை கைப்பற்றி போலீசார் விசாரணை
Mar 27 2023 2:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
5 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதற்காக கூறி ராஜ்கோட் வெளிநாட்டு வர்த்தக டிஜி ஜவாரி மால் பிஷ்னோயை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்நிலையில், ராஜ்கோட்டில் உள்ள தனது அலுவலக 4 வது மாடியில் இருந்து பிஷ்னோய் தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே டி. ஜி. ஜவாரி மால் பிஷ்னோயின் ராஜ்கோட்டில் உள்ள இல்லத்தில் சிபிஐ குழு சோதனை நடத்திய போது, பிஷ்னோயின் மனைவி ஒரு போர்வையில் சுற்றப்பட்ட பண மூட்டையை கீழே நின்றிருந்த ஒருவரிடம் மாடியில் இருந்து தூக்கி வீசும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆய்வு செய்து அந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 99 லட்சத்து 94 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.