நாடுமுழுவதும் புகையிலை பயிர்கள் பயிர்செய்யும் நிலத்தின் அளவு குறைந்துள்ளது : மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பதில்
Mar 27 2023 3:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் புகையிலை பயிர்கள் பயிர் செய்யும் நிலத்தின் அளவு பெருமளவு குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசி மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், 2017-18ம் நிதியாண்டில் 4.11 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் புகையிலை பயிர்கள் பயிர் செய்யப்பட்ட நிலையில், 2020-21ம் நிதியாண்டில் அதன் எண்ணிக்கை 3.57 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழ்நாடு, பீகார், ஆந்திரா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் புகையிலை பயிர்கள் பயிரிடப்படுதாகவும், இதில் மேற்குவங்கம் உள்ளிட்ட குறிப்பிட்ட மாநில அரசுகள் புகையிலை பயிர்களுக்கு பதிலாக மாற்றுப் பயிர்களை பயிர் செய்ய முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். அதுபோன்று ஊக்குவிக்கும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு 10 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி உள்ளதாகவும் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.