சாவர்கர் கடவுளை போன்றவர் அவரை அவமதிப்பதை பொறுத்துகொள்ள முடியாது : ராகுல்காந்திக்கு மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ்தாக்ரே எச்சரிக்கை
Mar 27 2023 5:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சாவர்கர் கடவுளை போன்றவர் என்பதால் அவரை அவமதிப்பதை பொறுத்துகொள்ள முடியாது என ராகுல் காந்திக்கு மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, நான் ஒன்றும் சாவர்கர் அல்ல, மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும், பாஜகவை தொடர்ந்து எதிர்த்து போராடுவேன் என்றும் கூறியிருந்தார். ராகுல்காந்தியின் இந்த பேச்சுக்கு உத்தரவ் தாக்ரே கடும் கண்டனம் தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலம் மாலேகான் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய உத்தவ் தாக்ரே, சாவர்கர் எங்களுக்கு கடவுளை போன்றவர் என்பதால் அவரை அவமரியாதை செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாது என தெரிவித்தார். மேலும், ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்ற நோக்கில் தான் ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றதாகவும் குறிப்பிட்டார்.