கேரளாவில் ஆள் அரவற்ற நகரமாக மாறிவரும் கும்பநாடு நகரம் : 15 சதவிகிதம் பேர் ஏற்கெனவே வெளியேறிவிட்டதாக தகவல்
Mar 27 2023 6:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரள மாநிலத்தில் கும்பநாடு என்ற சிறு நகரில் வசித்து வந்த பெரும்பாலான பொதுமக்கள் வெளியேறிய நிலையில், ஆள் அரவற்ற நகமாக அது மாறி வருகிறது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கும்பநாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள 20 கிராமங்களில் 15 சதவிகித வீடுகள் பூட்டப்பட்டுள்ளன. இந்த வீட்டில் வசித்தவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்ற தங்களது பிள்ளைகளுடன் சென்றுவிட்டதாகவும், வருவாய் அதிகரித்த காரணமாக பெரு நகரங்களில் வீடுகளை வாங்கி அங்கு குடிபெயர்ந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஒரு காலத்தில் 700க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வந்த பள்ளியில் தற்போது வெறும் 70 குழந்தைகள் தான் படித்து வருவதாகவும், அவர்களும் பள்ளிக்கு வந்து செல்லும் வாகனக் கட்டணங்களை ஆசிரியர்கள் கட்டினால் மட்டுமே வருவதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்நகரம் விரைவில் யாருமற்ற நகரமாக மாறிவிடும் அபாயம் இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் கவலை தெரிவித்தள்ளன.