மணிப்பூரில் பொதுப் பணித்துறை அமைச்சரின் வீட்டை அடித்து நொறுக்கிய உள்ளூர் மக்கள்... வன்முறையாளர்களிடம் இருந்து பாதுகாக்க அரசு தவறி விட்டதாக குற்றச்சாட்டு
May 25 2023 8:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மணிப்பூரில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் கோவிந்தாஸின் வீடு ஒரு குழுவினரால் அடித்து நொறுக்கப்பட்டது. பெரும்பாலும் பெண்களைக் கொண்ட அந்த கும்பல், வீட்டின் மீது தாக்குதல் நடத்தி, கேட், சன்னல்கள் மற்றும் மின்னணு சாதனங்களை சேதப்படுத்தியது. வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக முதலமைச்சர் பிரேன் சிங், கோவிந்தாஸ் மற்றும் பிற பாஜக எம்.எல்.ஏ.க்கள் அமைதியாக இருப்பதாகவும், ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளிடமிருந்து மக்களை பாதுகாக்க போதுமான ஏற்பாடு செய்யவில்லை என்றும் தாக்குதல் நடத்திய கும்பல் குற்றம் சாட்டியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூன்று வாரங்களுக்கு முன் தொடங்கி 70-க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்ற பழங்குடியினர் மற்றும் பழங்குடி அல்லாதோர் மோதலில் அமைச்சர் ஒருவரின் வீடு தாக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.