சாதாரண பாஸ்போர்ட் கோரி டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் : பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி நாளை பதில் மனு தாக்கல் செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவு
May 25 2023 9:06AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சாதாரண பாஸ்போர்ட் கோரி ராகுல்காந்தி தாக்கல் செய்த மனு தொடர்பாக பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி பதில் அளிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து ராகுல் காந்தி எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடா்ந்து, தனது எம்.பி. அந்தஸ்திலான பாஸ்போர்ட்டை ஒப்படைத்த அவர், சாதாரண மக்களுக்கான பாஸ்போர்ட் பெற நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். ஆனால் சுப்பிரமணியன் சுவாமி தொடா்ந்த நேஷனல் ஹெரால்டு நிதி மோசடி வழக்கில் நீதிமன்ற தடையில்லாச் சான்று பெற்றால்தான், புதிய பாஸ்போர்ட் பெற முடியும் என்பதால், தடையில்லாச் சான்று கோரி டெல்லி மாநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், சுப்பிரமணிய சுவாமி நாளை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.