புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை எதிர்கட்சிகள் புறக்கணிக்க கூடாது : சென்னையில் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்
May 25 2023 5:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை எதிர்கட்சிகள் புறக்கணிக்க கூடாது என மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்படவுள்ள செங்கோல் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை ஆளுநர் மாளிகையில் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், நாடு சுதந்திரம் பெற்றதற்கும், ஆட்சி மாற்றத்திற்கும் அடையாளம் செங்கோல் என்றார். புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் தமிழகத்தை சேர்ந்த 20 ஆதினங்கள் பங்கேற்று செங்கோலை வழங்க உள்ளதாக கூறினார் . நாடாளுமன்றம் ஐனநாயகத்தின் கோயில் என்றும், அந்த கோயிலுக்கான மரியாதையை அனைத்து கட்சிகளும் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைக்க குடியரசுத் தலைவரை ஏன் அழைக்கவில்லை என்று எதிர்கட்சிகள் கேட்பதாக கூறிய மத்திய நிதி அமைச்சர், சட்டீஸ்கர் சட்டப்பேரவை கட்டடத்தை மட்டும் சோனியா காந்தி திறந்து வைத்தது சரியா என்றும் கேள்வி எழுப்பினார்.