ஹைதராபாத்தில் தரையில் படுத்துக் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை மீது ஏறிய கார் : 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு
May 25 2023 5:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள அப்பார்ட்மென்ட் அடித்தளத்தில், தரையில் படுத்துக் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை மீது கார் ஏறிய விபத்தில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. கர்நாடகாவை சேர்ந்த கட்டடப் பணியாளர் கவிதா என்பவர், தனது குழந்தைகளுடன் மதிய உணவு அருந்தியுள்ளார். பின்னர் வெயிலின் தாக்கத்தால் அவரது 3 வயது குழந்தையை அப்பார்ட்மெண்ட் அடித்தளத்தில் உறங்க வைத்துள்ளார். அப்போது அங்கு பார்க்கிங் செய்வதற்காக வந்த கார், குழந்தையின் மீது ஏறியது. இதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. ஓட்டுநரின் கவனக்குறைவால் நிகழ்ந்த இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.