ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் செயல்படும் அமுல் நிறுவனம் : உடனடியாக தடுத்து நிறுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சருக்கு வலியுறுத்தல்
May 25 2023 5:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழ்நாட்டில் ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மத்திய அமைச்சருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
அமுல் நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவி உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தருமபுரி, வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 வட மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் மூலம் பால் கொள்முதல்செய்ய திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதை தடுத்து நிறுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.