ஆந்திராவில் ஐபிஎஸ், ராணுவ அதிகாரி என கூறி லட்ச கணக்கில் பணம் பறிப்பு : பலரிடம் பணம் பறித்த இளைஞர் போலீசாரால் கைது
May 26 2023 11:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆந்திராவில் ஐபிஎஸ், ராணுவ அதிகாரி போல் நடித்து பலரிடம் பணம் பறித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கோதாவரி மாவட்டம் சிக்கலை சேர்ந்த நாகராஜு கார்த்திக் ரகுவர்மா என்பவர் பட்டப்படிப்பு முடித்த நிலையில், எஸ்.ஐ. தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார். போலீஸ் ஆகும் கனவு நிறைவேறவில்லை என்பதால் ஐபிஎஸ், சிறப்பு அதிரடிப்படை போலீஸ் அதிகாரி, ராணுவ கர்னல் எனக்கூறி, பலரை மிரட்டி, லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில், நாகராஜ் கைது செய்யப்பட்டு, ஒரு துப்பாக்கி, 9 தோட்டாக்கள், போலி அடையாள அட்டைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.