பாடி பில்டர் பிரேம்ராஜ் அரோரா மாரடைப்பால் மரணம் : 2014ல் மிஸ்டர் இந்தியா, 2 முறை மிஸ்டர் ராஜஸ்தான் பட்டம் வென்றவர்
May 26 2023 12:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜஸ்தானை சேர்ந்த 42 வயதான பாடி பில்டர் பிரேம்ராஜ் அரோரா மாரடைப்பால் காலமானார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாடி பில்டர் பிரேம்ராஜ் அரோரா, 2014- மிஸ்டர் இந்தியா, தொடர்ந்து 2 முறை மிஸ்டர் ராஜஸ்தான், பாடி பில்டிங்கில் ராஜஸ்தான் சாம்பியன் ஷிப் உள்ளிட்ட பல்வேறு பட்டங்களை பெற்றுள்ளார். தீவிர உடற்பயிற்சிக்கு பிறகு கழிவறைக்கு சென்ற இவர், நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், உறவினர்கள் கதவை உடைத்து சென்று பார்த்தபோது உயிரிழந்து கிடந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.