மத்தியப்பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் மேலும் இரண்டு சிறுத்தை குட்டிகள் உயிரிழப்பு : பலவீனம் மற்றும் அதிகபட்ச வெப்பம் காரணமாக உயிரிழந்ததாகத் தகவல்
May 26 2023 1:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்தியப்பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் இரண்டு சிறுத்தை குட்டிகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் இருந்து மத்தியப்பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவிற்கு இந்த ஆண்டு பிப்ரவரியில் 11 சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டன. இதில் ஜூவாலா என்று அழைக்கப்படும் பெண் சிறுத்தை, கடந்த மார்ச் மாதம் 4 குட்டிகளை ஈன்றது. கடந்த 23ம் தேதி சிறுத்தை குட்டி ஒன்று உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் இரண்டு சிறுத்தைக் குட்டிகள் இறந்தன. பலவீனம் மற்றும் அதிகபட்ச வெப்பம் காரணமாக, இந்த சிறுத்தை குட்டிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.