முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு நிபந்தனையுடன் கூடிய இடைக்கால ஜாமீன் : மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும் வகையில் 6 வார கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் ஆணை
May 26 2023 2:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு ஒரு ஆண்டுக்கு பிறகு உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. ஹவாலா பணமோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகளால் சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கபட்டார். இந்நிலையில், ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் சத்யேந்தர் ஜெயின் வழக்கு தொடர்ந்தார். சத்யேந்தருக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கும் என அமலாக்கத்துறை கூறியதால் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இதனிடையே சத்யேந்தர் ஜெயின் உடல்நிலை மோசமடைந்து வருவதால்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை, விசாரித்த நீதிபதி மகேஸ்வரி தலைமையிலான அமர்வு, சத்யேந்தர் ஜெயின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும் வகையில் ஜூலை 11ம் தேதி வரை நிபந்தனையுடன் கூடிய இடைக்கால மருத்துவ ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.