டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க போவதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு
May 26 2023 3:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க போவதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். நாளை நடைபெறும் கூட்டத்தில், அனைத்து மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் நலனில் மத்திய அரசு அக்கறை காட்டவில்லை என பகவந்த் மான் குற்றம்சாட்டினார். கடந்தாண்டு நடைபெற்ற கூட்டத்தில், பஞ்சாப்பின் பிரச்சனைகள் குறித்து எழுப்பப்பட்ட நிலையில் இதுவரை மத்திய அரசு தீர்வு காணாததால், கூட்டத்தை புறக்கணிக்க போவதாக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்மான் கூறியுள்ளார்.