ராகுல்காந்திக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க டெல்லி ரோஸ் நீதிமன்றம் உத்தரவு : 3 ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையில் தடையில்லா சான்று வழங்கவும் ஆணை
May 26 2023 4:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்திக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், வயநாடு மக்களவை உறுப்பினர் பதவியை இழந்தார். இதனால் மத்திய அரசால் மக்களவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு பாஸ்போர்ட்டை ராகுல் காந்தி உரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இதனிடையே தனக்கு பத்து ஆண்டுகள் செல்லுபடி ஆகும் வகையில் சாதாரண பாஸ்போர்ட் வழங்க கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், ராகுல் காந்திக்கு 3 ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையில் தடையில்லா சான்று வழங்கவும், புதிய பாஸ்போர்ட் வழங்க அனுமதி அளித்தும் உத்தரவிட்டனர்.