சோழர்களின் செங்கோல் விவகாரத்தில் இந்திய பண்பாட்டை காங்கிரஸ் கட்சி ஏன் புறக்கணிக்கிறது? : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி
May 26 2023 5:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சோழர்களின் செங்கோல் விவகாரத்தில் இந்திய பண்பாட்டை காங்கிரஸ் கட்சி ஏன் புறக்கணிக்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார். புதிதாக திறக்கப்பட உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கருத்து மோதல்கள் நிலவி வரும் நிலையில், காங்கிரசின் கருத்தை எதிர்த்து அமித் ஷா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். பழமையான திருவாடுதுறை ஆதீனத்தை காங்கிரஸ் அவமதித்து விட்டதாக கூறியுள்ள அமித்ஷா, ஆதீனத்தின் வரலாற்றை போலி என காங்கிரஸ் தெரிவிப்பது, அவர்களது நடத்தையை காட்டுகிறது என்றும் சாடியுள்ளார்.