மல்யுத்த வீரர்களை போலீஸ் கையாண்ட விதத்திற்கு மம்தா பானர்ஜி கண்டனம் - 'நாட்டின் சாம்பியன்கள் இப்படி நடத்தப்படுவது வெட்கக் கேடானது' என விமர்சனம்
May 29 2023 8:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர் வீராங்கனைகளை போலீசார் கடுமையாக கையாண்டதற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் மற்றும் பிற மல்யுத்த வீரர்களை மோசமாக கையாண்ட டெல்லி போலீசை வன்மையாகக் கண்டிப்பதாக கூறியுள்ளார். நாட்டின் சாம்பியன்கள் இப்படி நடத்தப்படுவது வெட்கக்கேடானது என்றும் ஜனநாயகம் சகிப்புத்தன்மையில் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் சகிப்புத்தன்மை மற்றும் கருத்து வேறுபாடுகளை அடக்குவதில் எதேச்சதிகார சக்திகள் வளர்வதாக குற்றம் சாட்டியுள்ள அவர் வீரர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.