மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் இடி-மின்னலுடன் பெய்த கனமழைக்கு 2 பேர் உயிரிழப்பு - மஹாகல் லோக் கோயிலில் 6 ரிஷிகளின் சிலைகள் சேதம்
May 29 2023 10:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் பெய்த இடியுடன் கூடிய கனமழைக்கு 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர். ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. அத்துடன் கடந்த ஆண்டு அக்டோபரில் பிரதமர் நரேந்திர மோடியால் திறக்கப்பட்ட மஹாகல் லோக் கோயில் நடைபாதையில் உள்ள ஏழு சப்தரிஷி சிலைகளில் 6 சிலைகள் சேதமடைந்தன. இடம்பெயர்ந்த மற்றும் சேதமடைந்த சிலைகளை கிரேன் உதவிடன் மாற்றியுள்ளதாகவும், சிலையை உருவாக்கிய நிறுவனம் விரைவில் அவற்றை சீர் செய்து தரும் என உஜ்ஜைன் ஆட்சியர் தெரிவித்துள்ளார். மஹாகல் லோக்கில் 155 சிலைகள் உள்ள நிலையில் அவை குறித்தும் ஆய்வு செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே கோவில் கட்டுமானப் பணிகளில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, தரக்குறைவான பணிகளுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது.