கர்நாடகாவில் தேசிய நெடுஞ்சாலையில் கார்-லாரி மோதல் : 6 பேர் உயிரிழப்பு - ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் சித்தராமையா
May 29 2023 10:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடக மாநிலத்தில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் இருந்து குஜராத் சென்று கொண்டிருந்த லாரியும் விஜயபுராவில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த காரும் கொப்பல் மாவட்டம் கல்கேரி கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் லாரிக்கு அடியில் கார் முழுதாகப் புகுந்தது. இதனால் காரில் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் சித்தராமையா 2 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.