காற்று மழையில் சிக்கிய மாநாடு : சந்திரபாபு கட்சியின் மாநாடு பாதிப்பு... தொண்டர்கள் விரக்தி
May 29 2023 10:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் மாநாடு நிகழ்வு, பெரும் காற்றுடன் மழை பெய்ததால், பாதிக்கப்பட்டது. பிரம்மாண்ட மேடை, பேனர் உள்ளிட்டவற்றுடன் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ராஜமகேந்திரவரம் அடுத்த வெம்மகிரியில், மாநாட்டுக்காக அவரது கட்சியினர் திரண்ட வண்ணம் இருந்தனர். மேடை மின்னொளி ஏற்பாட்டில் மினுமினுத்தது. இதனிடையே, திடீரென காற்றும் மழையும் வந்தது. இதனால், பேனர், நாற்காலி, மேடை உள்ளிட்டவை பாதிக்கப்பட்டது. புழுதி பறந்ததால், கட்சி தொண்டர்கள் திக்குமுக்காடினர். இதனால், மாநாடு நிகழ்வு பாதிக்கப்பட்டது.