ஆவணங்கள் இன்றி ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கு எதிரான வழக்கு தள்ளுபடி : பொதுநல வழக்கை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
May 29 2023 2:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டை கட்டாயம் என உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கை, டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு பிறகு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித நிலையில், அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கு ஆதார் அடையாள அட்டை உள்ளிட்டவை கட்டாயம் என உத்தரவிடக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி, உரிய விதிமுறைகள் படி 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெரும் பணியை ரிசர்வ் வங்கி செயல்படுத்தி வருவதாகக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.