தெலங்கானாவில் வருமானவரித்துறை அதிகாரி போல் நடித்து 2.5 கிலோ நகை கொள்ளை : சிசிடிவி காட்சி மூலம் 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு
May 29 2023 2:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தெலங்கானாவில் வருமானவரி துறை அதிகாரிகள் என கூறி நகை கடைக்குள் புகுந்து இரண்டரை கிலோ தங்க நகைகளுடன் ஓட்டம் பிடித்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். செகந்திராபாத்தில் உள்ள நவக்கர் கோல்டு நகை கடைக்குள் புகுந்த நான்கு பேர் தாங்கள் வருமானவரித் துறை அதிகாரிகள் என்றும், சோதனை நடத்த வந்திருப்பதாகவும் கூறி உரிமையாளரை மிரட்டியுள்ளனர். பின்னர் கடையை சோதனையிடுவது போல் நடித்து, கடையில் இருந்த இரண்டரை கிலோ நகைகளை ஒரு பையில் போட்டு கொண்ட அவர்கள், உரிய விளக்கத்தை அளித்துவிட்டு நகையை பெற்றுக்கொள்ளும்படி கூறிவிட்டு நகைகளை எடுத்து சென்று விட்டனர். கடை உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்படவே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார், சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி போலி வருமான வரித்துறை அதிகாரிகள் நான்கு பேரை தேடி வருகின்றனர்.