உத்தரப்பிரதேசத்தில் குழந்தை மீது கார் ஏறி இறங்கிய பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தை
May 29 2023 2:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் குழந்தை தலை மீது கார் ஏறி இறங்கிய போதும், அதிர்ஷ்டவசமாக குழந்தை உயிர் தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. திவாரிப்பூர் அடுத்த தரியாசக்கில் குழந்தை ஒன்று சாலையில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அவ்வழியாக வந்த கார் ஒன்று குழந்தையின் மீது மோதியது. இதில், காரின் பின் சக்கரம் குழந்தையின் தலை மீது ஏறி இறங்கியது. ஆனால் அந்த குழந்தைக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. பின்னர் அந்த குழந்தை அங்கிருந்து எழுந்து வீட்டை நோக்கி ஓடும் காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த காட்சிகள் வெளியாகி காண்போரை உறைய வைத்துள்ளது.