தெலங்கானாவில் மிகப்பெரிய நூல்கலை வடிவில் உருவாக்கப்பட்டுள்ள தோனியின் உருவம் : வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்
May 29 2023 2:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தெலங்கானாவில் யூடியூபர் ஒருவர் தோனியின் உருவத்தை மிகப்பெரிய நூல்கலை வடிவில் உருவாக்கியுள்ள வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. தெலுங்கு எஸ்க்பிரிமண்ட் என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் சாய் கிரண் என்ற இளைஞர், தனது நண்பர்களுடன் சேர்ந்து, இருபதுக்கு இருபடி அடி அளவில் தோனியின் உருவத்தை மிகப்பெரிய நூல்கலை வடிவில் உருவாக்கியுள்ளார். இதனை கிரேன் மூலம் தூக்கி நிறுத்தி பட்டாசுகள் வெடித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், தோனி ரசிகர்கள் உருவாகியுள்ள இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.