டெல்லியில் 16 வயது சிறுமியை 16 முறை கத்தியால் குத்தி தலையில் கல்லைப்போட்டு கொன்ற காதலன் கைது
May 29 2023 3:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது காதலன் 20 முறை கத்தியால் குத்தி, தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. ஹதராபாத் அருகே ஜே.ஜே. காலனியை சேர்ந்த 16 வயது சிறுமி தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அந்தச் சிறுமியின் காதலன் ஷாஹில், சிறுமியை கொடூரமாக கத்தியால் குத்தியுள்ளார். பின்னர் ஆத்திரம் தீராத நிலையில், அவர் சிறுமியின் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொன்றுள்ளார். தகவலறிந்து வந்த போலீசார், கொலையாளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.