மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் கோரிக்கைகள் நிறைவேற்றாவிடில் போராட்டம் தீவிரமடையும் : அத்தியாவசிய பொருட்கள் டெல்லி எல்லைக்குள் வராமல் முற்றுகையிட விவசாயிகள் எச்சரிக்கை
May 31 2023 4:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மல்யுத்த வீரர் வீராங்கனைகளின் கோரிக்கை ஏற்கப்படவில்லையெனில் ஜூன் 5ம் தேதி முதல் பால் மற்றும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் டெல்லிக்குள் வரவிடாமல் தடுக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மல்யுத்த வீரர் வீராங்கனைகள் 35 நாட்களுக்கு மேலாக டெல்லியில் போராடிய நிலையில், அவர்களது போராட்டத்தை டெல்லி காவல்துறை தடுத்து நிறுத்தியது. இதனையடுத்து நேற்றைய தினம் கங்கையில் தங்களது பதக்கங்களை வீசி அவர்கள் முடிவு செய்த நிலையில் பாரதிய கிசான் சங்கம் உள்ளிட்ட விவசாய சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி பதக்கங்களை பத்திரப்படுத்தினர். மத்திய அரசுக்கு அடுத்த 5 நாட்கள் அவகாசம் வழங்குவதாகவும், அதற்குள் வீரர், வீராங்கனைகளின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையெனில் போராட்டம் தீவிரமடையும் என்றும் தெரிவித்துள்ளனர்.