பிரிஜ் பூஷன் சரனை கைது செய்வதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை : மல்யுத்த வீராங்கனைகளின் குற்றச்சாட்டு குறித்து டெல்லி காவல் துறை விளக்கம்
May 31 2023 4:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரனை கைது செய்வதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரணை கைது செய்ய கோரி ஒலிம்பிக் மற்றும் ஆசிய போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இவ்விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. அவரை கைது செய்வதற்கான போதிய ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், இவ்விவகாரம் தொடர்பாக 15 நாட்களுக்குள் அறிக்கையாக விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.