மணிப்பூரில் மீண்டும் இரு சமூகங்களின் ஆயுதக் குழுக்களிடையே மோதல்... துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியானதால் ராணுவம் குவிப்பு
Jun 6 2023 10:28AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் இரு குழுக்களுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பேர் கொல்லப்பட்டதால் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 3-ம் தேதி தொடங்கிய குக்கி மற்றும் மெய்தே இன மக்களுக்கு இடையேயான மோதலில் 98 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. கலவரத்தை அடக்க ராணுவம், அசாம் ரைபிள் படை மற்றும் மத்திய ஆயுதப்படை களமிறக்கப்பட்டன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 29-ம் தேதி முதல் 4 நாட்கள் மணிப்பூரில் முகாமிட்டு இரு சமூக மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும், கலவரங்கள் நின்றபாடில்லை. நேற்று காங்சுப் பகுதியில் திடீர் என இரு குழுக்களும் மோதிக் கொண்டதில் 3 பேர் உயிரிழந்ததுடன் 4 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.