திருவனந்தபுரத்தில் பிளீச்சிங் பவுடர் விற்பனை கடையில் ஏற்பட்ட தீ விபத்து : 5-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சேதம்
Jun 6 2023 11:00AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் சாலா மார்க்கெட்டில் பிளீச்சிங் பவுடர் விற்பனை கடையில் தீப்பற்றி எரிந்தது.
திருவனந்தபுரத்தில் முக்கிய பகுதியான சாலா சந்தை ஆரிய சாலையில் தனியாருக்கு சொந்தமான கடையில் பிளீச்சிங் பவுடர் வைக்கப்பட்டிருந்தது. அந்த அறையில், திடீரென தீப்பிடித்து எரிந்ததை பார்த்த வியாபாரிகள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் தீ அருகில் உள்ள கடைகளுக்கு பரவியதில், 5க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமாகின. இதனைத் தொடர்ந்து, திருவனந்தபுரம் உள்ளிட்ட 6 தீயணைப்பு நிலையங்களில் இருந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர், பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.