ரூ.12,000 கோடி மதிப்பிலான 2,500 கிலோ மெத்தம்பேட்டமைன் பறிமுதல் : இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் அதிரடி
Jun 6 2023 3:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரபிக்கடல் வழியாக கடத்த முயன்ற 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரத்து 500 கிலோ மெத்தம்பேட்டமைன் எனும் போதை பொருளை இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்து இதுவரை கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய அளவிலான போதை பொருள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, போதை பொருள் இல்லா இந்தியாவை உருவாக்க உறுதி பூண்டுள்ள நிலையில், கடந்த 2022ம் ஆண்டு 75 நாட்களில் 75 ஆயிரம் கிலோ போதை பொருட்களை அழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலக்கை தாண்டி 5 லட்சத்து 94 ஆயிரத்து 620 கிலோ போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.