ஆந்திராவில் இருந்து சென்னை வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தல் : சரக்கு வேனில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்திய கும்பல் கைது

Jun 7 2023 3:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆந்திர மாநிலம் அனக்காபள்ளியில் இருந்து வேன் மூலம் கஞ்சா கடத்த முயன்ற கும்பலை சூலூர்பேட்டை போலீசார் கைது செய்தனர். திருப்பதி மாவட்டம் சூலூர்பேட்டை ஹோலி கிராஸ் சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த சரக்‍கு வேனை சோதனை செய்தபோது, அதில் இருந்த ரகசிய அறைக்‍குள் 240 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. மேலும் வேனை பின் தொடர்ந்து வந்த காரில் இருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் கஞ்சா கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து கஞ்சா கடத்திய 8 பேரை கைது செய்த போலீசார், வேனையும், 48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இவர்கள், ஒடிஷாவிலிருந்து ஆந்திரா, சென்னை வழியாக அண்டை மாநிலத்திற்கும், இலங்கைக்‍கும் கஞ்சா கடத்துவதும், பின்னர் இலங்கையிலிருந்து கஞ்சாவுக்‍கு பதிலாக தங்கம் கடத்தி வருவதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00