அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகள் குறித்து துணை ஆணையர் சச்சின் குமார் வைஷ்யா அதிகாரிகளுடன் ஆலோசனை
Jun 7 2023 4:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகள் குறித்து துணை ஆணையர் சச்சின் குமார் வைஷ்யா அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆண்டுதோறும் அமர்நாத் குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வந்து செல்வர். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை வரும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31ம் தேதி வரை 62 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நாட்களில் பனிலிங்கத்தை காண வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.