கேரளாவில் நெல் சேமிப்பு நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்
Jun 7 2023 4:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரள மாநிலம் ஆலப்புழாவில் நெல் சேமிப்பு நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குட்டநாடு என்ற பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியுடன் விவசாயிகளும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, காவல்துறையினருக்கும், காங்கிரசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது. இதனையடுத்து தடியடி நடத்திய போலீசார் போராட்டத்துக்கு தலைமையேற்ற காங்கிரஸ் எம்.பி. சுரேஷை கைது செய்தனர்.