நாகாலாந்தில் நாய் இறைச்சிக்கான தடையை நீக்கி கவுகாத்தியின் கோஹிமா உயர்நீதிமன்றம் உத்தரவு
Jun 7 2023 4:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகாலாந்தில் நாய் இறைச்சிக்கான தடையை நீக்கி கவுகாத்தியின் கோஹிமா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வணிக நோக்கத்துக்காக நாய்களை இறக்குமதி செய்வதற்கும், அவற்றை வர்த்தகம் செய்வதற்கும், உணவகங்களில் அவற்றின் இறைச்சியை பயன்படுத்துவதற்கும் நாகாலாந்து அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில், தடையை நீக்க கோரி கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தடை உத்தரவு பிறப்பிக்க நாகாலாந்து அரசின் தலைமைச் செயலாளருக்கு உரிமை இல்லை என்றும், அரசு விதித்த தடையை நீக்கியும் உத்தரவிட்டுள்ளது.