நாடாளுமன்ற வரலாறு குறித்து பெருமிதம் : சுதந்திர இந்தியாவின் அடையாளமாக பழைய நாடாளுமன்ற கட்டடம் திகழ்கிறது - பிரதமர் மோடி
Sep 18 2023 12:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் எடுக்கப்பட உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்குவதற்கு முன்பு நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜி20 உச்சி மாநாட்டின் போது உலகளாவிய தென்னகத்தின் குரலாக மாறியதற்கும், ஆப்பிரிக்க யூனியன் ஜி 20 அமைப்பில் நிரந்தர உறுப்பினரானதற்கும் இந்தியா எப்போதும் பெருமைப்படும் என்று கூறினார்.
இவை அனைத்தும் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கான சமிக்ஞையாகும் என்று பிரதமர் தெரிவித்தார்.
இந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் சில நாட்கள் மட்டுமே நடந்தாலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நோக்கத்தை கொண்டது என்று பிரதமர் கூறினார்.
இந்தியாவை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது குறித்து விவாதிக்கவேண்டும் என்றும், 2047க்குள் நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
மேலும் சந்திரயான் திட்டம் மற்றும் ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய அனைவருக்கும் பிரதமர் பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டார்.