டெல்லியில் மாசு அளவு குறைந்ததைத் தொடர்ந்து அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் திறப்பு - நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிக்கு சென்ற மாணவர்கள்
Nov 20 2023 1:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் காற்று மாசு குறைந்ததையடுத்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதங்களில் வழக்கமாக காற்று மாசு அதிகரித்து காணப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு கடந்த சில வாரங்களாகவே காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து காணப்பட்டது. இதனால், மக்களுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாச பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் கடந்த 9ம் தேதி முதல் 18ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது, காற்று மாசு குறைந்துள்ளதால் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.